கடவுள் பாதி மிருகம் பாதி

படம் : ஆளவந்தான்
பாடல் : வைரமுத்து
பாடியவர் : கமல்ஹாசன்

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால்... கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...

நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மனிதன் இறையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா
தேவ ஜோதியில் கலப்பாயா?

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்வரை குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும்போது
இருதுளி மட்டும் சுடுகிறதே

நந்தகுமாரா நந்தகுமாரா
மழைநீர் சுடாது தெரியாதா?
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்
வெண்ணீர் துளி என அறிவாயா?
சுட்ட மழையும் சூடான மழையும்
ஒன்றாய் கண்டவன் நீதானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீதானே.


நன்றி : அன்புடன் Siddharth

No comments: