பாடல் :ஆவாரம் பூ .....
படம் : பூ.......
இசை: S.S.குமரன் .....
பாடியவர்: சின்மயீ...
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு ?
அந்திப் பகல்
மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு....
சொந்த வேரோடு
தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும்
புரியாதா?
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப் பகல்
மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு
காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
இடுக்கே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம்
மௌனம் ஆகும்
சொந்த வேரோடு
தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும்
புரியாதா?
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப் பகல்
மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்க்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள்லேல்லாம் நீ தான்
அதன் வாசங்கள்ளேல்லாம் நீ தான்
நீ விட்டுச்சென்றால் பட்டுப்போகும்
சொந்த வேரோடு
தான்கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும்
புரியாதா?
ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப் பகல்
மழை வெயில் சுமந்தே ......
நன்றி : http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=20895&sid=ee8e7f90030a9deb7a06178c32a1e8be
No comments:
Post a Comment