அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!
சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா?
ஆதி முதல் அந்தம்
உன் சொந்தம் உன் பந்தம்
நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும்
கூத்தாடும் விட்டோடும்
ஒர் சந்தைக் கடைதான்
இதில் நீயென்ன, நானென்ன
வந்தாலும் சென்றாலும்
என்னாச்சு விட்டுத்தள்ளு!
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
கையும் காலும் மூக்கும் கொண்டு
ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச
பாவம் யாவும் தீரனும்
ஆட ஆடப் பாவம் சேரும்
ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று
ஓடிப் போன தாரடா?
தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு
கட்டு படக்கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்றுவிழும்!
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்?
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!
சிவனைக்கூட பித்தன் என்று
பேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க் கென்றும்
ஞானப் பார்வை ஏதடா?
ஆதி முதல் அந்தம்
உன் சொந்தம் உன் பந்தம்
நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும்
கூத்தாடும் விட்டோடும்
ஒர் சந்தைக் கடைதான்
இதில் நீயென்ன, நானென்ன
வந்தாலும் சென்றாலும்
என்னாச்சு விட்டுத்தள்ளு!
அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
கையும் காலும் மூக்கும் கொண்டு
ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச
பாவம் யாவும் தீரனும்
ஆட ஆடப் பாவம் சேரும்
ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று
ஓடிப் போன தாரடா?
தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு
கட்டு படக்கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்றுவிழும்!
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்தபாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கையாற்றில் இந்த அழுக்குப் போகும்?
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும்பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப்போகும் கரும்பு! - ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
No comments:
Post a Comment