இசை: விஸ்வனாதன் - ராமமூர்த்தி
படம் பிடிக்கப்பட்ட ஆண்டு: 1964
இலங்கையில் ராணி திரையரங்கில் 1966 ஆம் ஆண்டுகளில் பெரும் வரவேற்பைப்பெற்று100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றித்திரைபடம்.
கொடுத்த தெல்லாம் கொடுத்தான் அவன்,
யாருக்காக கொடுத்தான்,
ஒருத்தருக்கா கொடுத்தான் ஊருக்காக கொடுத்தான்.
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா,
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை.
படைத்தவன் மேல் பழியும் இல்லை, பசித்தவன் மேல் பாவமில்லை,
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார், உழைத்தவர்கள் தெருவில் நின்றார்,
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை.
இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லையென்பார்,
மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும்,
எது வந்த போதும், பொது என்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.
No comments:
Post a Comment